மகாராஷ்டிரா: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1500 வழங்கும் திட்டத்தில் இருந்து 92 லட்சம் பேர் நீக்கம்

சுமார் 12 லட்சம் பெண்கள் ஆண்டுக்கு ₹2.5 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் கொண்ட வருமான வரி செலுத்துவோராகக் கண்டறியப்பட்டனர்.
மகாராஷ்டிரா மகளிர் உதவித்தொகை
மகாராஷ்டிரா மகளிர் உதவித்தொகை
Published on

65 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தில் இருந்து 92 லட்சம் பயனர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

e-KYC

மகாராஷ்டிரா மாநில அரசு கடந்த 2024-ம் ஆண்டு பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் லட்கி பஹின் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்திற்காக கோடிக்கணக்கான பெண்கள் விண்ணப்பம் செய்தனர். தற்போது 2.4 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் 1500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

பயனர்கள் தங்களுடைய கூடுதல் விவைரங்களை இ-கேஒய்சி (e-KYC) மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இதறு சுமார் 8 மாதம் காலக்கெடுவும் அறிவித்திருந்தது.

தற்போது காலக்கெடு நிறைவடைந்த நிலையில், e-KYC பூர்த்தி செய்யாத பயனர்களை இந்த திட்டத்தில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது அரசு. அதன்படி கடந்த ஒரு மாதத்திற்குப் முன்பு 80 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக அறிவித்திருந்தது.

தற்போது இந்த எண்ணிக்கை தற்போது 92 லட்சத்தை கடந்துள்ளது. இத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட பயனாளிகள் எண்ணிக்கையில் இருந்து 38 சதவீதம் இதுவாகும்.

இந்த எண்ணிக்கை குறைவு என்பது கட்டாய நடைமுறைகளை நிறைவு செய்யாததால் மட்டுமே ஏற்பட்டதல்ல. தகுதி வரம்புகள் தொடர்பான பல்வேறு காரணங்களாலும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 முதல் 55 லட்சம் பெண்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இ-கேஒய்சி நடைமுறையை நிறைவு செய்யவில்லை. அதேவேளையில், 12 லட்சம் பெண்களின் ஆண்டு குடும்ப வருமானம் இத்திட்டத்திற்கான வரம்பை விட அதிகமாக இருந்தது. மேலும், 4.5 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் அதிகபட்ச வயது வரம்பான 65-ஐக் கடந்திருந்தனர்.

14000 ஆண்கள் பயன்பெற முயற்சி

மேலும், சுமார் 14,000 ஆண்கள் இத்திட்டத்தின் பலன்களைப் பெற முயன்றதால் அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். பீட் (Beed) மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 28 லட்சம் பெண்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மூத்த அதிகாரியின் கூற்றுப்படி, பயனாளிகள் 'இ-கேஒய்சி' (e-KYC) நடைமுறையை நிறைவு செய்ய அரசு சுமார் எட்டு மாத கால அவகாசம் அளித்திருந்தது. அந்த காலகட்டத்தில் பல பெண்களால் இந்த நடைமுறையை முடிக்க இயலாததால், சுமார் 55 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

சுமார் 12 லட்சம் பெண்கள் ஆண்டுக்கு ₹2.5 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் கொண்ட வருமான வரி செலுத்துவோராகக் கண்டறியப்பட்டனர். ஏறக்குறைய 5 லட்சம் பெண்கள் ஏற்கனவே 'நமோ ஷேத்கரி யோஜனா' (Namo Shetkari Yojana) திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற்று வருகின்றனர். மறுசரிபார்ப்பு நடைமுறைக்குப் பின்னரே பயனாளிகளின் இறுதி எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் பெயர்கள் தவறுதலாக நீக்கப்பட்டதாக கருதும் பயனாளிகளின் குறைகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் மாநில அரசுக்கு மாதந்தோறும் கூடுதலாக சுமார் 3500 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஆகும்.

இந்த செலவினம் மாநிலத்தின் நிதி நிலைக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும், இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ₹3,541 கோடி செலவினத்தை நியாயப்படுத்த முடியாது என்றும் சிஏஜி (CAG) சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com