War | மத்திய கிழக்குப் போரில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் பலி

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
War | மத்திய கிழக்குப் போரில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் பலி
Published on

அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், மத்திய கிழக்குப் போரில் சிக்கி இதுவரை 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார்.

மாயமான நபரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தவும், இறந்தவர்களின் உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com