இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தினர் 11 பேர் கைது

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர்கள் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்து உள்ளனர்.
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தினர் 11 பேர் கைது
Published on

வங்கதேசத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாணவர்கள் நடத்தும் போராட்டம் காரணமாக எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

போராட்டம் காரணமாக அந்நாட்டில் இருந்து சிலர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த 11 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com