கே.கே.நகரில் என்ஜினீயர் மர்ம மரணம்

கே.கே.நகரில் என்ஜினீயர் மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகரில் என்ஜினீயர் மர்ம மரணம்
Published on

போரூர்:

சென்னை, கே.கே.நகர், ராமசாமி சாலையை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது34). சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் இளங்கோவன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மர்மமாக இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com