நல்லாற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் நல்லாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #NallaruRiver #NallaruFlood
நல்லாற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி, பழங்கரை, ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் நல்லாற்றில் தண்ணீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்ததால் பழமைவாய்ந்த தாமரை குளம், சங்கு மாங்குத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நல்லாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்வதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #NallaruRiver #NallaruFlood

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com