கீரனூரில் மளிகை கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை

கீரனூரில் குடும்ப பிரச்சனையில் மளிகை கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீரனூரில் மளிகை கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

கீரனூர்:

கீரனூர் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் பழனியம்பதி (வயது 38). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பழனியம்பதி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சிய டைந்த அவர்கள் அவரை கீழே இறக்கி, சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனை க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த கீரனூர் போலீசார், பழனியம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com