

பாகூர்:
பாகூர் அருகே சேலியமேடு காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சிவசங்கரி (வயது35). இவர் பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிவசங்கரி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது தெரியவந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரி பின்னர் வீட்டில் நாட்டு மருந்து சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சிவசங்கரி திடீரென இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சவுரி வழக்குபதிவு செய்து சிவசங்கரி மஞ்சள் காமாலை நோய் தாக்கத்தால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.