வேப்பங்குப்பம் ஆதிதிராவிடர் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- சமையல்காரி-கணவர் சிறையில் அடைப்பு

அணைக்கட்டு அருகே வேப்பங்குப்பம் ஆதிதிராவிடர் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மற்றும் சமையல்காரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேப்பங்குப்பம் ஆதிதிராவிடர் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- சமையல்காரி-கணவர் சிறையில் அடைப்பு
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (60). அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் சிறுவர் காப்பகத்தில் சமையல் வேலை செய்து வருகிறார்.

இவரது கணவர் வெங்கடேஸ்வரன் (வயது62). இந்த காப்பகத்தில் அதிகளவில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், காப்பகத்தில் உள்ள சிறுமிகளை கோட்டீஸ்வரி தனது வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முதியவர் வெங்கடேஸ்வரன், வீட்டுக்கு வரும் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது தொடர்பாக, வாரம் ஒரு முறை காப்பகத்துக்கு வரும் வாலாஜாவை சேர்ந்த வார்டன் மலர்விழியிடம் 3 சிறுமிகளும் புகார் செய்துள்ளனர். உடனடியாக அவர், சிறுமிகளை அழைத்து சென்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து, சிறுமிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய கோட்டீஸ்வரியை கைது செய்தனர். இதையறிந்த முதியவர் வெங்கடேஸ்வரன் தலைமறைவானார்.

இந்நிலையில், போலீசார் தீவிரமாக தேடி வருவதை அறிந்த வெங்கடேசன் வேலூர் ஜே.எம் 3-வது கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து முதியவர் வெங்டேஸ்வரன் மற்றும் கோட்டீஸ்வரி இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி வெற்றிமணி உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரும் ஜெயிலில் அடைக்கபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com