நடிகர் சிரஞ்சீவி பண்ணை வீட்டில் பயங்கர தீ விபத்து

ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. #Chiranjeevi #Chiranjeevifarmhouse
நடிகர் சிரஞ்சீவி பண்ணை வீட்டில் பயங்கர தீ விபத்து
Published on

ஐதராபாத்:

தெலுங்கு திரையுலகின் கதாநாயகனும் மத்திய முன்னாள் மந்திரியுமான நடிகர் சிரஞ்சீவிக்கு ஐதராபாத்தில் உள்ள கோக்காபேட் பகுதியில் மிகப்பெரிய பண்ணை வீடு உள்ளது.

தற்போது அவர் நடித்துவரும் ‘சியே ரா நரசிம்ம ரெட்டி’ என்ற திரைப்படத்துக்காக இந்த பண்ணை வீட்டில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த அரங்கத்தின் ஒரு பகுதியில் இன்று மாலை திடீரென்று தீ பிடித்தது. காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ அரங்கத்தின் பெரும்பகுதியை நாசப்படுத்தியது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். இந்த விபத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Chiranjeevi  #Chiranjeevifarmhouse 

X

Maalai Malar
www.maalaimalar.com