search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மகளிர் கபடி போட்டி - ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    சங்கரன்கோவிலில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான மகளிர் கபடி போட்டியை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மகளிர் கபடி போட்டி - ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • சங்கரன்கோவிலில் மகளிர் கபடி போட்டி நேற்று நடந்தது.
    • இதில் 14 பள்ளிகள் மற்றும் 8 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி மற்றும் கூடைப்பந்து போட்டிகள் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில் மகளிர் கபடி போட்டி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, ஒன்றிய செய லாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்திபன், உடற்கல்வி இயக்குனர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் 14 பள்ளிகள் மற்றும் 8 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது,

    இந்தியாவில் விளை யாட்டில் தமிழகம் முதலிடம் பிடிக்க தமிழக முதல்-அமைச்சர் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றார். அதற்காக தற்போது திறமை வாய்ந்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமனம் செய்துள்ளார்.

    மேலும் முதல்-அைமச்சர் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.50 கோடி மதிப்பில் தமிழக முழுவதும் 14 விளையாட்டுகள் அடங்கிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

    இதில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் பரிசு வழங்க உள்ளார். மேலும் வெற்றி பெற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதமும், மேலும் விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற ஊக்கத் தொகையும் வழங்க உள்ளார்.

    அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன் படுத்திக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தியும், விளையாட்டில் கவனம் செலுத்தியும் பல தகுதிகளை பெற்று அரசு பணிக்கு சேர அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.

    மேலும் இளைஞர்கள் தான் எதிர்கால இந்தியாவை ஒளியேற்ற கூடியவர்கள் என்பதால் அனைவரும் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலச்சந்தர், பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளைத்துரை, மகேஸ்வரி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார்,

    செய்யதுஅலி, மின்வாரிய தொ.மு.ச. திட்டச் செயலாளர் மகாராஜன், நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைசெயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், முகேஷ், மாணவர் அணி கார்த்தி, உதயகுமார், அப்பாஸ்அலி மற்றும் கேபிள் கணேசன், வேல்முருகன், வெங்கடேஷ் வீரமணி, வீரா, ஜிந்தாமைதீன், சம்பத், ஜெயகுமார், பிரகாஷ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×