search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
    X

    3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    • ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகள் மற்றும் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள அந்தேரிப்பட்டி, சாமல்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அந்தேரிப்பட்டி, சாமல்பட்டி ஊராட்சிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி திட்ட பராமரிப்பு கோட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகள் மற்றும் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள அந்தேரிப்பட்டி, சாமல்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது அந்தேரிப்பட்டி அருகில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலை விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

    எனவே மேற்கண்ட பகுதிகளில் இந்த 3 நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ளவும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    Next Story
    ×