search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்லாந்தில் நடைபெறும் யோகா போட்டிக்கு ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் தேர்வு
    X

    தாய்லாந்தில் நடைபெறும் யோகா போட்டிக்கு ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் தேர்வு

    • போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முகிலன்,முகமது அப்துல்லா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்கள் ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023-க்கு தேர்ச்சி பெற்றனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் கரூர் மாவட்டத்தில் நடத்திய ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023 தேர்ச்சி போட்டியில் கலந்து கொண்டனர்.

    பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் முகிலன், 6-ம் வகுப்பு மாணவன் முகமது அப்துல்லா முதலிடத்திலும், 7-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன், முகமது இலியாஸ் மற்றும் 5-ம் வகுப்பு மாணவன் தருண் பிரசாத் ஆகியோர் 2-ம் இடத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தாய்லாந்தில் நடைபெறக்கூடிய ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023-க்கு தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாணவர்களுக்கு யோகா ஆசிரியை மாதவி பயிற்சி அளித்தார். வெற்றி பெற்று தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×