என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காங்கேயத்தில் குடி போதையில் கார், பஸ்சை நிறுத்தி அட்டகாசம் செய்த பெண்ணால் பரபரப்பு
- 45 வயது மதிக்கத்தக்க பெண், குடிபோதையில் வாகனங்களை மறித்து ரகளை செய்வதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் வந்தது.
- கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவுக்கு அடிமையானதும் தெரிந்தது.
காங்கேயம் :
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், கார், பஸ்சை நிறுத்தி போதையில் அட்டகாசம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயத்தில், திருப்பூர் செல்லும் சாலையில் 45 வயது மதிக்கத்தக்க பெண், குடிபோதையில் வாகனங்களை மறித்து ரகளை செய்வதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணை அப்புறப்படுத்த முடியாமல் திணறினர். போலீசாரிடம் திமிறிய போதை பெண், அங்கு வந்த காரை நிறுத்தி, சாவியை பறித்தார். அவ்வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி கலாட்டாவில் ஈடுபட்டார். காங்கேயம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார், அந்த பெண்ணை சமாதானம் செய்து, லாவகமாக ஆட்டோவில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த பெண் திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவுக்கு அடிமையானதும் தெரிந்தது. அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்