search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரிக்கையை வலியுறுத்தி பதிவு மூப்பு  இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு
    X

    கோப்பு படம்.

    கோரிக்கையை வலியுறுத்தி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு

    • பதிவு மூப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்
    • ஒரு சதவீதமான மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட உள்ளதாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    உடுமலை:

    பதிவு மூப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

    இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அருண்குமார் மற்றும் மனோஜ் கூறியதாவது:-

    ஏற்கனவே, தி.மு.க.,வின், 311வது தேர்தல் வாக்குறுதியான, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல் கட்டமாக சென்னையில், கோரிக்கை வெல்ல ஆயத்த மாநாடு நடத்தினோம்.இரண்டாவது கட்டமாக செப்டம்பர் 5-ந்தேதி முதல் வருகிற 27ந் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் அறவழி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

    அதிலும், அரசு கோரிக்கையை ஏற்கவில்லை என செப்டம்பர் 28-ந்தேதி முதல் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்.

    இந்நிலையில் கடந்த 14ந் தேதி ஒரு திருமண விழாவில்தமிழக முதல்வர் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், மீதம் உள்ள ஒரு சதவீதமான மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட உள்ளதாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே உண்ணாவிரத போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள் மட்டும் தனியாக பங்கெடுக்காமல் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×