search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவில் யோகா போட்டி: பிரண்ட்லைன் பள்ளி மாணவி வெற்றி
    X

    முதல் பரிசை தட்டி சென்ற எஸ்.சம்யுக்தா ஸ்ரீயை பள்ளி நிர்வாகம் பாராட்டி பரிசு வழங்கிய காட்சி

    மாநில அளவில் யோகா போட்டி: பிரண்ட்லைன் பள்ளி மாணவி வெற்றி

    • யோகா போட்டியில் தமிழகம் முழுவதும் 700-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • 8-வது மாநில அளவிலான யோகா போட்டி சேலம் விநாயக மிஷன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    வீரபாண்டி :

    தமிழகத்தில் 8-வது மாநில அளவிலான யோகா போட்டி சேலம் விநாயக மிஷன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் திருப்பூர் பிரண்ட்லைன் மிலோனியம் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி எஸ்.சம்யுக்தா ஸ்ரீ கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றார். போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியையும், அதற்கு உறுதுணையாக இருந்த யோகா ஆசிரியர் நந்தகுமாரையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவசாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி சக்தி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா வெகுவாக பாராட்டி பரிசு வழங்கினர்.

    Next Story
    ×