search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் மாவட்ட  இளையோா் பிரிவு வாலிபால் போட்டி - 24-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம். 

    திருப்பூா் மாவட்ட இளையோா் பிரிவு வாலிபால் போட்டி - 24-ந்தேதி நடக்கிறது

    • மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
    • மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தோ்வு செய்யப்படுவா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட அளவிலான இளையோா் பிரிவு வாலிபால் போட்டிக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வாலிபால் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்ட வாலிபால் சங்கத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் பிரிவு வாலிபால் போட்டிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு சிறுபூலுவபட்டியில் உள்ள திருப்பூா் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்) மைதானத்தில் ஜூலை 24ந் தேதி நடைபெறுகிறது. இதில், பங்கேற்கும் வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது வயதுச் சான்று, பிறப்புச் சான்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

    இதில் பங்கேற்பவா்கள் கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதிக்குப் பின் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். இதில் தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகள் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் வரும் ஆகஸ்ட் 6 ந் தேதி முதல் 9 ந்தேதி வரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தோ்வு செய்யப்படுவா் என்று தெரிவித்துள்ளாா்.

    Next Story
    ×