search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் 5 மாதங்களாக இயக்கப்படாததால்   பயணிகள் பாதிப்பு
    X

    கோப்புபடம்

    கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் 5 மாதங்களாக இயக்கப்படாததால் பயணிகள் பாதிப்பு

    • தண்டவாள பராமரிப்புப் பணி எனக் கூறி ரத்து செய்யப்பட்டது.
    • ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த ஒரு மாதத்துக்கு ெரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது.

    திருப்பூர்:

    கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக, கடந்த அக்டோபரில் 17 நாட்கள் ரத்து செய்யப்பட்டது. கடைசியாக அக்டோபர் 30ந் தேதி இயக்கப்பட்டது. அதன்பிறகு தண்டவாள பராமரிப்புப் பணி எனக் கூறி ரத்து செய்யப்பட்டது.5 மாதங்களாக இந்த ெரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த ஒரு மாதத்துக்கு ெரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது.

    தண்டவாள பராமரிப்பு, மேம்பாட்டு பணி முக்கியமானது என்றாலும் தொடர்ந்து ெரயில் இயங்காததால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் என 4 மாவட்ட பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    குறைந்தபட்ச நாட்களிலாவது ெரயிலை இயக்க வேண்டும். பணி நடக்கும் இடங்களை தவிர்த்து பிற பகுதிகளுக்கு ெ ரயிலை இயக்கலாமே என்று பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    Next Story
    ×