என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிமெண்டு கடை உரிமையாளரை கழுத்தை அறுத்த தொழிலாளி
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் பள்ளி குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் மாதனூர் ஒடுகத்தூர் சாலையில் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( 28). தொழிலாளி. இவருக்கும் முருகனுக்கும் முன்விரோத தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கார்த்திக் சிமெண்டு கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது கார்த்திக்குக்கும் முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகன் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மாதனூர் கிராம சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்