search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
    X

    தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

    • ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி.எண் மற்றும் பயிற்சி அளிக்கப்படும்
    • கலெக்டர் அறிவிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனா ளிகள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்குகிறது.

    எனவே மாவட்டத்தை சேர்ந்த விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணையதங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன்படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இ-சேவை மைய கட்டி டத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோ மெட்ரிக் கருவிகள் உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 எம்.பி.பி.எஸ். இ-சேவை மையம் அமையும் இடத்தில் அதிவேக அலைவரி சையுடன் தொடர்ச்சியான தடையற்ற இண்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் அமையப்பெற வேண்டும்

    விண்ணப்பங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாற்றுத் திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி.எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.

    மாவட்டத்தில் படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் இ- சேவை மையம் அமைத்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் ெதரிவித்துள்ளார்.

    Next Story
    ×