பெண்ணை தாக்கிய 3 பேர் கைது

ஏரி மண் கடத்தியபோது பார்த்ததால் ஆத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
பெண்ணை தாக்கிய 3 பேர் கைது
Published on

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த புலிவாய் கிரா மத்தைச் சேர்ந்தவர் யமுனா (வயது 52), இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. கடந்த 29-ந்தேதி இரவு 11 மணியளவில் தனது விவசாய நிலத்திற்கு யமுனா ஏரிக்கரை மீது சென்று கொண்டிருந்தார்.

அதே கிராமத்தை சேர்ந்த சிவா (32), சசிக் குமார் (30), குணா (32), கோவிந்தன் (42) ஆகியோர் ஏரியில் இருந்து டிராக்டரில் மண் அள் ளிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

யமுனா டார்ச்லைட் அடித்தபடி வந்ததை பார்த்த சிவா உள்ளிட்ட 4 பேரும் டார்ச் லைட் அடித்து எங்களை நோட்டமிட வந்தாயா எனக்கேட்டு யமுனாவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் யமுனா விற்கும், சிவா உள்ளிட்ட 4 பேரிடம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து யமுனாவை சரமாரி தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த யமுனா சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து யமுனா வந்தவாசி வடக்கு போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குணா, கோவிந்தன், சசிகுமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

மேலும் கைதான 3 பேரையும் வந்தவாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சிவாவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com