என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஊழியர் தற்கொலை
- தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சிவக்குமார் பணிபுரிந்து வந்தார்.
- விடுப்பில் இருந்து வந்த சிவக்குமார் தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப் 2 குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகராஜ் மகன் சிவக்குமார் (வயது 21). இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கள உதவியாளராக பணிபுரிந்து வந்தார். 10 நாள் மருத்துவ விடுப்பில் இருந்து வந்த இவர் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்ததும் தெர்மல் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






