ஓசூர் அரசு நர்சு தற்கொலை: தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது

ஓசூரில் அரசு மருத்துவமனை நர்சு தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது
கைது
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தணிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி கல்பனா தேவி (வயது 36). இவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த கல்பனா தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ஓசூர் அரசு மருத்துவமனையில் தட்டச்சராக பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள வலந்தி வலசு பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பவருக்கும் கல்பனா தேவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததுதெரியவந்தது.

மேலும், இந்த கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், ரமேஷிடம் இருந்து கல்பனாதேவி தொடர்பை துண்டித்தார். ஆனால் ரமேஷ் தொடர்ந்து தொந்தரவு செய்ததால், கல்பனா தேவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த ரமேசை, சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com