search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் வில்வித்தை போட்டியில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம்
    X

    வில்வித்தை பயிற்சியில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல்லில் வில்வித்தை போட்டியில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம்

    • வில்வித்தை போட்டி என்பது கண், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஒருசேர வலிமை சேர்க்கும் பயிற்சி ஆகும்.
    • இந்த பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பார்வைதிறன் அதிகரிப்பது டன், சிந்திக்கும் திறனும் கூடும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகாலத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் உடல் வலிமையை கூட்டுவதை போல, மன வலிமையையும் அதிகரிக்கச் செய்யும் வில்வித்தை போட்டியில் மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஒலிம்பிக் அசோசியேசன், தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடை க்கானல் ஆகிய 5 இடங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய பயிற்சியாளரும், நடுவர் சங்க தலைவருமான சீத்தாராமன், உதவி பயிற்சியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் இந்த பயிற்சியை அளித்து வருகின்றனர்.

    வில்வித்தை போட்டி என்பது கண், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஒருசேர வலிமை சேர்க்கும் பயிற்சி ஆகும். இந்த பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பார்வைதிறன் அதிகரிப்பது டன், சிந்திக்கும் திறனும் கூடும்.

    திண்டுக்கல் விளையாட்டு அரங்கில் 4 முதல் 45 வயதுடைய அனைத்து தரப்பினருக்கும் வில்வித்தை பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. மாணவர்கள் தங்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் பெற்றோர்களே முன்வந்து தங்கள் பிள்ளை களை இந்த பயிற்சிக்கு அழைத்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் பயிற்சி மேற்கொண்டு உலக கோப்பை, வில்வித்தை தகுதி போட்டிக்கு தேர்வுபெற்ற மாணவர்கள் தனுஷ்கந்தன், அன்புராஜ், கோபிநாத், ஹனுஸ் ஆகியோர் விளையாட்டு கோட்டாவில் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள் தற்போது வில்வித்தை போட்டியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தகுதியான பயிற்சியாளர்களை கொண்டு மாவட்டத்தில் சிறந்த பயிற்சி அளிக்கப்படு கிறது.

    தேசிய போட்டிகளில் பங்குபெற இந்தியன் வில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரீர்கொவ், காம்பவுண்டு ஆகிய வில் பயிற்சிகள் அளிக்கப்படு கிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் சிந்தனையை ஒருமுக ப்படுத்தி தனித்திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் என்றார்.

    Next Story
    ×