search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இரும்பு கம்பி நடுவதில் தகராறு; வாலிபருக்கு கத்தரிக்கோல் குத்து
    X

    நெல்லையில் இரும்பு கம்பி நடுவதில் தகராறு; வாலிபருக்கு கத்தரிக்கோல் குத்து

    • இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
    • இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நெல்லை:

    பாளை திருவண்ணாமலை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் கூடைப்பந்து விளையாடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் இரும்பு கம்பி நட்டு வைத்திருந்தார்.

    அதனை கடந்த 4-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (39) என்பவர் அகற்ற முயன்றுள்ளார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் செல்வகுமார் கத்தரிக்கோலால் சுரேஷின் வயிற்றில் குத்தினார்.

    இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பாளை சப்-இன்ஸ்பெக்டர் சிவகளை வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.

    Next Story
    ×