search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
    X

    சேலம் மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

    • ஒவ்வொரு வருடமும் “தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்” 2 வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது.
    • இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

    சேலம்:

    5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலுமாக தவிர்க்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் "தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்" 2 வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 5 வயது குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்புநீர் கரைசல் தூள் பாக்கெட்டுகளை இலவச மாக வழங்கி வயிற்றுப்போக்கின் போது அதனை உபயோகிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றர்.

    அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் ஓ.ஆர்.எஸ். பகுதி அமைக்கப்படும் மற்றும் ஓ.ஆர்.எஸ். உப்பு நீர் கரைசல் தயாரிப்பது, கை கழுவும் முறை, பிரத்யேக தாய் பால் அளிக்கும் முறை, இணை உணவு வழங்கும் முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

    5 வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பிற்கான முக்கிய காரணங்களில் வயிற்றுப்போக்கு ஒன்றாகும். அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கால் குழந்தைகளுக்கு நீர்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும்.

    இந்நீர்சத்து குறைபாட்டினை தடுக்க ஓ.ஆர்.எஸ். (உப்புநீர் கரைசல்) எனும் உயிர்காக்கும் அமுதம் அளிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பினை தடுக்கலாம். மேலும் வயிற்றுப்போக்கின் போது துத்தநாக மாத்திரையை 14 நாட்களுக்கு தொடர்ந்து கொடுப்பதால், வயிற்றுப்போக்கு விரைவில் குணமடையும்.

    வயிற்றுப்போக்கு எளிதில் தடுக்க கூடிய நோய்களில் ஒன்றாகும். பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு பற்றிய விழிப்புணர்வின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தலாம்.

    இதனை கருத்திற்கொண்டு தேசிய அளவில் சேலம் மாவட்டத் தில் உள்ள 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 501 துணை சுகாதார நிலை யங்கள், 13 அரசு மருத்துவ மனைகள் மற்றும் 2,696 அங்கன்வாடி மையங்களில் முகாம் நடத்துதப்படுகிறது.

    இம்முகாம்களில் பொது சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட துறைகளைச் சார்ந்த 3,212 பணி யாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் இந்காத முகாம் மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயன்பெற உள்ளனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×