என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 99 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது
    X

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 99 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது

    • 42 ஏரிகள் 25 சதவீதம் அளவே நிறைந்துள்ளது
    • கால்வாய்கள் தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் வழக்கத் துக்கு அதிகமாக இந்த ஆண்டு மழைப்பொழிவு இருந்தது. மேலும், பாலாறு, பொன்னையாற்றில் ஓராண் டாக தண்ணீர் ஓடிய வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் மாவட்டத் தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 75 சதவீதத்துக்கும் மேல் 4 ஏரிகளும், 50 சதவீ தத்துக்கு மேல் 69 ஏரிகளும், 25 சதவீதத்துக்கும் மேல் 155 ஏரிகளும் நிரம்பியுள்ளன. 42 ஏரிகள் 25 சதவீதம் அளவே நிறைந்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்துக்கும் சேர்த்து 8.52. டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க முடியும். இப்போது 5.43 டி.எம்.சி.தண்ணீர் சேமிப் பில் உள்ளது.

    இந்நிலையில் பல ஏரிகள் நிரம்பாததற்கு காரணம் ஏரி களுக்கு செல்லும் கால்வாய்கள் தூர் நிறைந்துள்ளதும், ஆக்கிரமிப்புகளுமே ஆகும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×