search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க ேகாரிக்கை
    X

    தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க ேகாரிக்கை

    • தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க ேகாரி ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர் சங்கத்தின் திருப்புல்லாணி ஒன்றியத்தில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சார்பில் ஒன்றியத்தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம், தூய்மை காவலர்களுக்கு 100 நாள் பணியாளருக்கு வழங்கப்படும் தினக்கூலி தொகை ரூ.281 வழங்கப்பட வேண்டும்.

    தூய்மை பணியாளருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    செயலாளர் தர்மராசு, பொருளாளர் பானுமதி, மாவட்ட செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஜெயபால், ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சேகு ஜலாலுதீன், பொருளாளர் மங்களசாமி மற்றும் தூய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×