அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முஸ்லிம்கள், ஜமாத்தார்கள் சீர் கொடுத்து சிறப்பித்தனர்.
அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே சேமங்கோட்டை விநாயகர், வில்லிதமுடையார் அய்யனார், தூண்டி கருப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக அரசனாகரிபட்டினம், கோபாலபட்டினம், ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள், ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் கோவிலுக்கு சீர் கொடுத்தும் மற்றும் அன்னதானத்திற்கு 50 மூட்டை அரிசியும் கொடுத்து சிறப்பித்தனர். முஸ்லிம் இளைஞர்கள் மோர், தண்ணீர் பந்தல் மற்றும் ஊரில் நுழைவுவாயிலில் கும்பாபிஷேக வரவேற்பு குறித்து பதாகை வைத்திருந்தனர். இந்த பகுதியில் இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக அங்கு உள்ளவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com