search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூரில் பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    மேட்டூரில் பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • மேட்டூர் பூங்கா அருகே கருப்பு பட்டை அணிந்து தமிழக அரசின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் ஏராளமான சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

    மேட்டூர்:

    தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அரசு ஊழியர் சங்கத்தின் மேட்டூர் கிளை சார்பில் மேட்டூர் பூங்கா அருகே கருப்பு பட்டை அணிந்து தமிழக அரசின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சேலம், நாமக்கல் மாவட்ட செய லாளர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். பொதுப்ப ணித்துறையில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி சேமநல நிதியினை சம்ப ளத்தில் பிடித்து குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் .காலியாக உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×