search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பிசியோதெரபி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கோவையில் பிசியோதெரபி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பிற மருத்துவ துறையின் தலையீடு இல்லாமல் பிசியோதெரபி மருத்துவ துறையை தனிதுறையாக அறிவிக்க வேண்டும்

    கோவை:

    தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் இன்று முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஸியோதெரபி மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் ராஜா செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்த்தில் தென்காசி மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மரு.செல்வராஜ் அவர்கள் பிசியோதெரபி மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது .

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவரும் பிசியோதெரபி மருத்துவருமான டாக்டர்.ராஜா செல்வகுமார் பேசியதாவது:-

    தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் வாசுதேவ நல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு இருந்த வருகை பதிவேட்டை பார்த்துள்ளார். அப்போது அதில், சரத்குமார் என்பவர் பெயருக்கு முன்னால் "இயன்முறை மருத்துவர்" என்ற பதவி பொறுப்பை பார்த்து, காழ்ப்புணர்வு கொண்ட அவர், இவன் மருத்துவர் இல்லை என்று ஒருமையில் பேசியதுடன், "பயிற்றுநர்" என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. இவர் மீது தமிழக அரசு துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் கைது செய்ய வேண்டும். மருத்துவ காழ்ப்புணர்ச்சியோடு இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க பிசியோதெரபி மருத்துவத்திற்கென்று அனைத்து மாவட்ட ங்களிலும் தனி மாவட்ட இணை இயக்குநர்களை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா பேசுகையில், சமூக நீதி மருத்துவ துறையில் காப்பாற்ற பட வேண்டும். எனவே பிற மருத்துவ துறையின் தலையீடு இல்லாமல் பிசியோதெரபி மருத்துவ துறையை தனிதுறையாக அறிவிக்க வேண்டும். என்றனர்.

    இதில் சங்க சட்ட ஆலோசகரும், சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவருமான சாக்ரடீஸ், சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் பொதுச் செயலாளர் சு.பா. முத்து கிருஷ்ணன், மாவட்ட தலைவர் கவர்னர் பாண்டியன், மாவட்டச் செயலாளர் மூர்த்தி தர்மராஜ், சில்வா, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் டாக்டர்.கணபதி முருகன் மற்றும் செயலாளர் டாக்டர்.சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×