search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சௌந்தரிய நாயகி அம்மன், சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    சௌந்தரிய நாயகி அம்மன், சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம்

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கிழுமத்தூர் கிராமத்தில் உள்ள சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கும்பாபிஷேக விழாவில் கிழுமத்தூர், பெருமத்தூர், உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கிழுமத்தூர் கிராமத்தில் சௌந்தரிய நாயகி அம்மன், சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை தீர்த்த ஊர்வலம், கோ பூஜை, அதனை தொடர்ந்து மறுநாள் திருப்பள்ளி எழுச்சி, முதல் கால வேள்வி வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல், மருந்து சாத்துதல் நடைபெற்றன.தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி வழிபாடு திருமுறை விண்ணப்பம், அருளார் அமுதம் வழங்குதல், அருட்பிரசாதம் வழங்குதல், நடைபெற்றன.

    நேற்று காலை மூன்றாம் கால வேள்வி வழிபாடு, நாடி சந்தன வழிபாடு, கைலாய வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க திருகலசங்கள் புறப்பாடும் நடைபெற்றன.

    தொடர்ந்து வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில் கிழுமத்தூர், பெருமத்தூர், உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதானமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளை குன்னம் காவல்துறையினர் செய்திருந்தனர்

    இதேபோல் அத்தியூர் குடிகாட்டில் திரோபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில்அத்தியூர், ஒகளூர், ஆடுதுறை, ஆகிய சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளை மங்களமேடு காவல்துறையினர் செய்து இருந்தனர்

    Next Story
    ×