search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து தங்க சங்கிலி திருட்டு
    X

    வீட்டின் பூட்டை உடைத்து தங்க சங்கிலி திருட்டு

    • வீட்டை பூட்டிவிட்டு அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார்
    • வீட்டின் பூட்டை உடைத்து தங்க சங்கிலியை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஷீலாராணி (வயது 42). கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    ஷீலாராணி சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து ஷீலாராணி அளித்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்."


    Next Story
    ×