என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் நடைபெற்ற விழாவில் ஒண்டிவீரன் நினைவு தபால் தலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்
- ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் ஒண்டிவீரனின் புகழை போற்றும் விதமாக அவரது பெயரில் தபால் தலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
- கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் துணைசபாநாயகர் வி.பி.துரைசாமியும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கோவிந்தராஜும் நினைவு பரிசு வழங்கினர்.
நெல்லை:
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
சிலைக்கு மரியாதை
இைதயொட்டி பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணைமந்திரி எல்.முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் ஒண்டிவீரனின் புகழை போற்றும் விதமாக அவரது பெயரில் தபால் தலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
தபால் தலைவெளியீடு
அதன்படி இன்று கே.டி.சி.நகர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒண்டிவீரனின் நினைவு தபால் தலையை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட அதனை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் துணைசபாநாயகர் வி.பி.துரைசாமியும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கோவிந்தராஜும் நினைவு பரிசு வழங்கினர்.
அமைச்சர்- எம்.எல்.ஏ.க்கள்
நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், ஞானதிரவியம், எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, தலைமை தபால் துறை தலைவர் ராஜேந்திர குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த கவர்னர்கள் பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை விருந்தினர் மாளிகை வந்தனர். பின்னர் அங்கிருந்த ஒண்டிவீரன் மணிமண்டபத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்