search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    குமாரபாளையம் நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடம் செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது.

    இதில் ஆணையர் (பொ) ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடம் செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்க வேண்டும், சுற்றுப்புற பகுதியை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு மரங்களின் அவசியம் எடுத்துரைக்க அனைத்து பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் அனைத்து வார்டுகளில் விநியோகம் செய்யப்பட்டன.

    Next Story
    ×