சுவீட் கடையை அடித்து நொறுக்கிய போதை ஆசாமிகள்

கேக்கிற்கு பணம் கேட்டதால் சுவீட் கடையை 4 போதை ஆசாமிகள் அடித்து நொறுக்கினர்.
சுவீட் கடையில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சி.சி.டி.வி. காட்சி
சுவீட் கடையில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சி.சி.டி.வி. காட்சி
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி கடை தெருவில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருபவர் முகமது அலி. வழக்கம் போல முகமது அலி வியாபாரம் செய்த போது, போதையில் கடைக்கு ஆட்டோ ஒன்றில் வந்த 4 பேர் அரை கிலோ கேக் கேட்டுள்ளனர். 

கேக்கை கொடுத்த கடை உரிமையாளர், பணம் கேட்டுள்ளார். அதற்கு போதை ஆசாமிகள் ஆத்திரமடைந்து கடையில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியதோடு முகமதுஅலியையும் தாக்கியுள்ளனர். மேலும், ஆட்டோவில் இருந்த அரிவாளை எடுத்து தாக்க முயற்சி செய்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த கடைக்காரரின் கூச்சலை கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் அங்கு கூடியதால் 3 பேர் ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.

ஒருவரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் கீழையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் காரை நகர் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து தப்பி சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

ஓசியில் கேக் கேட்டு தராத ஸ்வீட் கடையில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போதை கும்பல் அடித்து நொறுக்கிய சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com