search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரி மருத்துவமனை சார்பில் மாரத்தான் போட்டி -கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்
    X

    மாரத்தான் போட்டியை கலெக்டர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

    காவேரி மருத்துவமனை சார்பில் மாரத்தான் போட்டி -கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

    • மாரத்தான் போட்டி 5 மற்றும் 10 கிலோ மீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெற்றது.
    • போட்டியில் மொத்தம் 5,000 பேர் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    உலக இருதய தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இருதய பாதுகாப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவேரி மருத்துவமனை சார்பில் நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ேபாட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகர துணை மேயர் கே. ஆர். ராஜூ, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி மற்றும் மாநகர போலீஸ் துணைகமிஷனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காவேரி மருத்துவமனை நிர்வாக மேலாளர் வைர முத்து வரவேற்று பேசினார். மாரத்தான் போட்டி 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    இப்போட்டி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இருந்து தொடங்கி குறிப்பிட்ட பாதையை கடந்து பின்னர் மருத்துவக் கல்லூரி மைதானம் வந்தடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் 2,300 பேர் மற்றும் பெண்கள் 2,700 பேர் என மொத்தம்5,000 பேர் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர்.

    10 கிலோ மீட்டர் போட்டி-ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை எஸ்.நிகில்குமார் ரூ.12,500, இரண்டாம் பரிசை எம். ரெங்கராஜ் ரூ. 10,000, மூன்றாம் பரிசை எம். அஜித்குமார் ரூ.7,500, 10 கிலோ மீட்டர்- பெண்கள் பிரிவு போட்டியில் முதல் பரிசை எஸ். ஐஸ்வர்யா ரூ. 12,500, இரண்டாம் பரிசை எஸ்.எம். ஹிதாயத் பவுசியா ரூ. 10,000, மூன்றாம் பரிசை சி.வேணிகா ரூ. 7,500-ஐ பெற்றனர்.

    5 கி.மீ போட்டி- ஆண்கள் பிரிவில் கலந்துகொண்டு முதல் பரிசை மூர்த்தி ரூ. 10,000, இரண்டாம் பரிசை ஸ்ரீனிவாசன் ரூ.7,500 மூன்றாம் பரிசை முத்து இசக்கி ரூ. 5,000 பெற்றனர்.

    5 கி.மீ. - பெண்கள் பிரிவில் முதல் பரிசை ஆர். ரம்யா ரூ.10,000, இரண்டாம் பரிசை எம்.சவுமியா ரூ. 7,500 மூன்றாம் பரிசை எம். பாக்கியவதி ரூ. 5,000. வெற்றி பெற்றவர்களுக்கு விழா மேடையிலேயே பரிசுத் தொகை வழங்கப் பட்டது. விழாவில் காவேரி மருத்துவமனை டாக்டர் மகபூப் சுபுகாணி, டாக்டர் லட்சுமணன், டாக்டர் டி.ஜே. பிரபாகர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காவேரி மருத்துவமனை மருத்து வர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×