சட்டக்கல்லூரியில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது- பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மனு

சட்டக்கல்லூரியில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்று கல்லூரி முதல்வரிடம் பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மனு கொடுத்தனர்.இந்து முன்ணணி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் பரமசிவம், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
சட்டக்கல்லூரியில்  அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது- பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மனு
Published on

மதுரை

மதுரை அரசு சட்டக் கல்லுரி வளாகத்தில் தி.மு.க. சட்டப்பிரிவு சார்பில் இன்று (21-ந்தேதி) கலைஞர் நூற்றாண்டுவிழா பேச்சுப்போட்டி, கருத்த ரங்கம் நடைபெறுகிறது.

மதுரை மாநகர மாவட்ட பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு தலைவர் அய்யப்பராஜா தலைமை யில் சட்டக்கல்லூரி முதல்வர் குமரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

மதுரை அரசு சட்டக்கல்லூரியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் சட்டம் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியிருப்பது மாணவர்க ளிடையே பிரிவினையை ஏற்படுத்தும். இதுவரை சட்ட கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கியது கிடையாது. தற்போது தி.மு.க.வுக்கு வழங்கப்பட்ட அனுமதியால் மாணவர்க ளிடையே அரசியல் மோதல் ஏற்பட வாயப்பு உள்ளது.

எனவே தி.மு.க. சார்பில் நடத்தபட உள்ள பேச்சு போட்டி கருத்தரங்க விழாவுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாஜக வழக்கறிஞர் பிரிவு மதுரை மாநகர் தலைவர் அய்யப்பராஜா வுடன் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை த்தலைவர் ராமராஜ், இந்து முன்ணணி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் பரமசிவம், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com