கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ஏகாட்சர மகாகணபதிக்கு 14 வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம்

திரளான பக்தர்கள் தரிசனம்31-ந்தேதி காலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ஏகாட்சர மகாகணபதிக்கு 14 வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகா னந்தகேந்திர வளா கத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் காலையில் யாக சாலை பூஜையும் அதைத் தொடர்ந்து அபிஷேக மும் பின்னர் அலங்கார தீபாராத னையும் பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கு தலும் நடந்து வருகிறது. இரவு யாகசாலை பூஜை யும் அலங்கார தீபாரா தனையும் பக்தர் களுக்கு அருட்பிரசா தம் வழங்குதலும் நடை பெற்று வருகிறது.

7-ம் திருவிழாவை யொட்டி 108 கலச பூஜையும் அதைத்தொடர்ந்து கலசாபிஷேகமும்நடந்தது. இரவு 7 மணிக்கு அருகம்புல், தாமரை, அரளி, பச்சை கொழுந்து, மரிக்கொழுந்து, வில்வம் இலை, செவ்வந்தி, சம்பங்கி, பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ், கனகாம்பரம், நெத்தி பூ, பிச்சி, மல்லிகை, ஆகிய 14 வகையான வண்ண மலர்களால் விநாயகருக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது.

9-ம் திருவிழாவை யொட்டி ஏகாட்சர மகா கணபதிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. இந்த புஷ்பா பிஷேகம் மற்றும் சங்காபி ஷேகத்தை டாக்டர் சிவஸ்ரீ சங்கர் பட்டர் தலைமையில் 6 அர்ச்சகர்கள் நடத்தி னார்கள். 10-ம் திருவிழாவான இன்று

(31-ந்தேதி) காலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

இதையொட்டி இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை (1-ந்தேதி) காலை யில் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com