search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் நகை பறிப்பு - தொழிலாளி கைது
    X

    புதுக்கடை அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் நகை பறிப்பு - தொழிலாளி கைது

    • சிறுமியின் கழுத்தில் கிடந்த சுமார் ரூ. 45 ஆயிரம் மதிப்பிலான 1½ பவுன் எடையுள்ள தங்க சங்கிலி
    • செயின் பறிப்பின் போது சிறுமியின் பின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் கிளைசன் (வயது 39). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இளைய மகள் ஹெர்பின் கிளைசின் (10) என்பவர் வீட்டருகில் உள்ள சாலையில் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த யூஜின் (39) என்பவர் சிறுமியின் கழுத்தில் கிடந்த சுமார் ரூ. 45 ஆயிரம் மதிப்பிலான 1½ பவுன் எடையுள்ள தங்க சங்கிலியை பறித்து விட்டு, பைக்கில் தப்பி சென்றுள்ளார். செயின் பறிப்பின் போது சிறுமியின் பின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து யூஜினை கைது செய்தனர்.

    Next Story
    ×