search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷத்துடன் மகா சிவராத்திரி விழா
    X

    கோப்பு படம் 

    கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷத்துடன் மகா சிவராத்திரி விழா

    • மகா சிவராத்திரி விழா 18-ந்தேதி நடக்கிறது
    • விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் சந்திப்பில் சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்து உள்ளது.

    இந்த கோவிலில் சனி பிரதோஷத்துடன் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதை யொட்டிஅன்றுஅதிகாலை 4.30 மணிக்கு மஹா கணபதி ஹோமமும், காலை 7 மணிக்கு நித்திய பூஜையும் 7.30 மணிக்கு தீபாராதனையும் 10.30 மணிக்கு சிறப்பு அபி ஷேகமும் 11 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது.

    இந்த அன்னதானத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். மாலை 4.30 மணிக்கு சனி மகா பிரதோஷமும், மாலை 4.35 மணிக்கு பிரதோஷ அபிஷேகமும் 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் 5.35 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

    6.15 மணிக்கு முதல் ஜாம பூஜையும் இரவு 8.30மணிக்கு ஆன்மீக சொற் பொழிவும் 9.15 மணிக்கு 2-ம் ஜாம பூஜையும் 10 மணிக்கு இசை நாட்டியாஞ்சலியும் நள்ளிரவு 12.15 மணிக்கு 3-ம் ஜாம பூஜையும் 12.30 மணிக்கு சமய சொற் பொழிவும் 1.30 மணிக்கு ஆன்மீக சங்கமமும் நடக் கிறது. மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு 4-ம் ஜாம பூஜையும் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. 4 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் 4.15 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×