search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பெண்கள் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா
    X

    மாணவ- மாணவிகளுடன் வண்ண பலூன்களை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பறக்கவிட்டார்.

    அரசு பெண்கள் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா

    • 349 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மாணவர்கள், ஆசிரியர்களின் அறிவியல் சார்ந்த செய்முறைகளை பார்வையிட்டனர்.

    திருவாரூர்:

    தமிழக முதலமைச்சரால் திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான "வானவில் மன்றம்" தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்து சிந்திக்கும் திறனை ஊக்குவி ப்பதற்கான "வானவில் மன்றம்" தொடக்க விழா மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பூண்டி.கே.கலைவாணன் முன்னி லை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளின் அறிவியல் மனபான்மை யினை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியே இவ்வானவில் மன்றம் திட்டம். அரசுப்பள்ளி மாண வர்களிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தினை வளர்த்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதே வானவில் மன்றத்தின் நோக்கமாகும்.

    இத்திட்டத்திற்காக அறிவியல் மற்றும் கணிதத்தில் திறன்மிக்க கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இக்கருத்தாளர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பாடத்தில் கடினப்பகுதிகளை எளிய செய்முறைகள் மூலம் பள்ளி ஆசிரியருடன் இணைந்து பல்வேறு செய்முறைகளை செய்துகாட்டி மாணவ ர்களின் கற்றலை மேம்படுத்தி கற்கும் அனுபவத்தை மாணவர்களுக்கு மேம்படு த்துவார்கள்.

    திருவாரூர் மாவட்டத்தில் 349 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையு ள்ள 26 ஆயிரத்து 377 மாணவ செல்வங்கள் பயன்பெறுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்களின் அறிவியல் சார்ந்த செய்முறைகளை பார்வையிட்டனர். இத்திட்ட தொடக்க நிகழ்ச்சியின் ஒன்றாக மாணவியர்களுடன் கலெக்டர், எம்.எல்.ஏ. சேர்ந்து பலூன்களை பறக்க விட்டனர்.

    இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளி மாயகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், பள்ளி தலைமையாசிரியர் பூந்தமிழ் பாவை, உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×