என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெறலாம்
    X

    தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெறலாம்

    • தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும், முன்னுரிமை அடிப்படை யில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
    • விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில், விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்ப தாரர்கள், விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில், விரைவு தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம், கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும், முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், ஏற்கனவே விவசாய மின் இணைப்புகோரி பதிவு செய்துள்ள விவசாயிகள், தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×