search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு பேரணி
    X

    பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு பேரணி

    • நிகழ்ச்சியில் 15 பார்வையற்றவர்கள், 25 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர்.
    • பேரணியை கே.ஆர்.பி.இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தமிழ்நாடு முழுவதும் 324கே மாவட்டத்தின் சார்பாக கண்தான விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சசி ஞானசேகரன், சங்க முன்னாள் செயலாளர்கள் ரஜினி, சுரேஷ்,ஆனந்த், சங்க முன்னாள் பொருளாளர் பரமசிவன் ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்தான விழிப்புணர்வு குழு தலைவர் முனைவர் அருணாச்சலம் வரவேற்றார். இதில் 15 பார்வையற்றவர்கள், 25 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர்.

    பேரணியை பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர் குழு நிறுவனர், வட்டாரத் தலைவர் கே. ஆர். பி. இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் அங்குள்ள நிறுவனர்களை சந்தித்த பின்னர் தமிழ்நாடு முழுவதும் புறப்பட்டு சென்றார்கள். பேரணியின் ஏற்பாடுகளை 324 கே கண்தான மாவட்ட தலைவர் சோபா ஸ்ரீகாந்த், கண்தான பேரணி மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். முடிவில் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு துணை தலைவர் முருகன் நன்றி கூறினார்

    Next Story
    ×