search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    விளாத்திகுளம் அருகே தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • அயன்பொம்மையாபுரம் கிராமத்திலும் உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கி வைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கையினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வேலுசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் அயன்பொம்மையாபுரம் கிராமத்திலும், விளாத்திகுளம் பேரூராட்சி 3- வது வார்டு பகுதியிலும் உறுப்பினர் சேர்க்கை பணியினை தொடங்கி வைத்தனர்.

    இதில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மகேந்திரன் ஊராட்சி தலைவர் சித்ரா முத்துராமலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, கலை இலக்கிய அணி சேதுராஜன், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, கிளை செயலாளர்கள் முருகன், கந்தவேல், ரத்தினசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், தொ.மு.ச. சுப்பையா, சிந்தலக்கரை சாமி, சுப்புராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி கனகவேல், ஒன்றிய அவைத்தலைவர் தர்மராஜ், பொருளாளர் கருப்பசாமி, துணை செயலாளர் பாலம்மாள் தங்கராஜ் உட்பட தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×