search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி
    X

    யோகாசன போட்டியில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள்.

    திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி

    • திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வத்தலக்குண்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்த 32 மாணவ-மாணவிகள் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதியில் தென்காசியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட உள் விளையாட்டு அரங்கில், மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. போட்டியை தலைவர் ஜி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வத்தலக்குண்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பொது பிரிவு, சிறப்பு பிரிவு மற்றும் ஆர்ட்ஸ்டிக், ரிதமிக் ஆகிய பிரிவுகளில் வயது அடிப்படையில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்த 32 மாணவ-மாணவிகள் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதியில் தென்காசியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் செயலாளர் நித்யா, ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×