search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குத்தாலத்தில், காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    குத்தாலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குத்தாலத்தில், காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜம்பு.கென்னடி தலைமை தாங்கினார்.

    முன்னாள் வட்டாரத் தலைவர் மாதிரிமங்கலம் மணி, மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அகமது, நகரத் தலைவர் சூர்யா, பேரூராட்சி மன்ற உறுப்பினர் நிரஞ்சனி தேவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார தலைவர் பரதன் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏவுமான எஸ்.ராஜகுமார் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மாநில செயலாளர் கனிவண்ணன், மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் வடவீரபாண்டியன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மயிலாடுதுறை நகர தலைவர் ராமானுஜம், நகர பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் குத்தாலம் பேரூர் செயலாளர் பூர்விகா செந்தில் நன்றி கூறினார்.

    Next Story
    ×