search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் 6-வது முறையாக ரத்து - திருப்பூர் பயணிகள் அதிருப்தி
    X

    கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் 6-வது முறையாக ரத்து - திருப்பூர் பயணிகள் அதிருப்தி

    • காவேரி - ஆனங்கூர் இடையே நடந்த பராமரிப்பு பணியால் ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.
    • திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளடக்கிய மேற்கு மண்டல ரெயில் பயணிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    திருப்பூர் :

    கொரோனா பரவலின் போது கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் 2022 ஜூலை 11 ல் பாசஞ்சர் இயங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 3 நாள் மட்டுமே ரெயில் இயங்கிய நிலையில் ஜூலை 14 முதல் 24 வரை 10 நாட்களுக்கு காவேரி - ஆனங்கூர் இடையே நடந்த பராமரிப்பு பணியால் ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் தொடர்ந்து 6-வது முறையாக, ரெயில் ரத்து என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில், இருகூர் - சூலூர் இடையே பொறியியல் மேலாண்மை பணி நடப்பதால் பிப்ரவரி 1-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 28 நாட்களுக்கு கோவை - சேலம், சேலம் - கோவை ரெயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

    பொறியியல் மேம்பாடு, தண்டவாள பராமரிப்பு பணியை காரணம் காட்டி,5 மாதங்களாக பாசஞ்சர் ரெயில் இயங்காத நிலையில், 6-வது முறையாகவும், கோவை - சேலம்பாசஞ்சர் ரெயிலே ரத்து செய்யப்படுவது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளடக்கிய மேற்கு மண்டல ரெயில் பயணிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    Next Story
    ×