search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில்  பெண்ணிடம் செயின் பறிப்பு
    X

    சிதம்பரத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

    • மகாலட்சுமி கணவருடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் நகரில் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம், வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் இருவர் தாலி செயினை பறித்து சென்றனர். கடலூர் மாவட்டம் கனகசபைநகர், தில்லை நடராஜர் சாலையைச் சேர்ந்த கணேஷ். இவரது மனைவி மகாலட்சுமி (50). இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தர். மோட்டார் சைக்கிள் கனகசபைநகர் 4-வது குறுக்குத் தெருவில் சென்ற போது, இவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் மகாலட்சுமி அணிந்திருந்த சுமார் 10 பவுன் மதிப்புள்ள தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×