search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    ஆட்டோ ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • ஒருவழிப்பாதையை கட்டாயம் பின்பற்றி, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    சீர்காழி போக்குவரத்து காவல்துறை சார்பில் நகரில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வா ளர்கள் பிறைச்சந்திரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் ஆய்வாளர் சிவக்குமார் பேசுகையில், ஆட்டோ ஓட்டுனர்கள் பணியின்போது சீருடை அணிந்து வாகனங்களை இயக்கிடவேண்டும், மதுஅருந்திவிட்டோ, செல் போன் பேசிக்கொண்டோ, வாகனங்களை இயக்ககூடாது.அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் நகரில் ஒருவழிப்பாதையை கட்டாயம் பின்பற்றி,போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து ஆட்டோக்களை இயக்கவேண்டும் என்றார். அப்போது போக்குவரத்து முதல்நிலை காவலர்கள் தேவேந்திரன், பூபாலன், அண்ணாமலை மற்றும் 70-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர். முடிவில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    Next Story
    ×