search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்
    X

    எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டது.

    செம்பட்டியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்

    • எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆத்தூர், செம்பட்டி பகுதிகளில் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்வு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன் தொடங்கி வைத்தார்.
    • எச்.ஐ.வி நிலையை அறிந்திட டெஸ்ட் தான் பெஸ்ட் என்ற வாசகங்கள் உள்ளடக்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

    செம்பட்டி:

    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா அறிவுறுத்தலின் பேரில் எய்ட்ஸ் இல்லாத தமிழகம் 2030 என்ற இலக்கை நோக்கி எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆத்தூர், செம்பட்டி பகுதிகளில் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்வு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன் தொடங்கி வைத்தார்.

    அதன்பின்னர் செம்பட்டி மற்றும் ஆத்தூர் பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களில் எச்.ஐ.வி தொற்றுள்ளோரும் நம்மில் ஒருவரே மற்றும் எச்.ஐ.வி நிலையை அறிந்திட டெஸ்ட் தான் பெஸ்ட் என்ற வாசகங்கள் உள்ளடக்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி நம்பிக்கை மைய ஆற்றுனர் கண்ணன் மற்றும் ஆய்வக நுட்புநர் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×